ஆயுள்வேத வைத்தியசாலை நாவாந்துறையில் திறந்து வைப்பு!

யாழ். மாநகர சபையினால் நாவாந்துறை ஆயுள்வேத வைத்தியசாலையின் திறப்பு விழாவானது யாழ்.மாநகர ஆணையாளர்இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் வைத்தியசாலையை திறந்து வைத்தார்.

இவ் வைத்தியசாலைக் கட்டடமானது உறுப்பினரான நீ.பிலிப் வட்டார நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டது.

குறித்த வைத்தியசாலை திறப்பு விழாவில் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர பிரதி ஆணையாளர், செயலாளர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *