
கொழும்பு, ஜனவரி 26: சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்படுள்ளது:
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். மற்ற இடங்களில் சீரான வானிலை நிலவும்.
கடல் பகுதிகள்:
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஏனைய கடற்பரப்புகளில் சீரான வானிலை நிலவும்.காற்று வடகிழக்கு திசையில் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 20-30 கிமீ வேகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.