புட்டினுக்கு எதிராக தடை – அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது தடை விதிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்குமாயின் இவ்வாறு தடை விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா தமது தென் மேற்கு எல்லையிலுள்ள நாட்டின் மீது நடவடிக்கை எடுக்குமாயின், பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் அமெரிக்கா தடை குறித்து அறிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தேவையற்ற பதற்றத்தை தோற்றுவிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *