ஜப்பானின் சில பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

ஜப்பானில் மேலும் 18 வட்டாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த அரசாங்க ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்காரணமாக ஜப்பானின் 70 சத வீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கு ஜப்பானின் ஒசாக்கா, கியோட்டோ உள்ளிட்ட பகுதிகளும் இவற்றில் உள்ளடங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

ஜப்பானில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை புதிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *