
கிழக்கு மாகாண பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திசாநாயக்க தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டி கோரல உட்பட அமைச்சின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றிய 2150 பட்டதாரி பயிலுனர்கள் இன்று நிரந்தர நியமனங்களை பெற்றுக் கொண்டனர்.
கோவிட் சூழ்நிலை காரணமாக இன்று சம்பிரதாயபூர்வமாக 600 பட்டதாரி பயிலுனர்கள் அழைக்கப்பட்டு நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொண்டனர்.
ஏனைய பட்டதாரி பயனர்களுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளில் பட்டதாரிகளாக இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 1906 பேர் அந்தந்த பாடசாலைகளில் நியமனங்களை தற்காலிகமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.