
காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாட்டில் துவிச்சக்கர வண்டி பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுற்று சூழல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “இலங்கையில் துவிச்சக்கர வண்டியின் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுற்று சூழல் துறை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்தி பணிக்குச் சென்றால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் முக்கிய வீதிகளில் சைக்கிள் பாதை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.