அடுத்த வாரம் அரிசியின் விலை குறையுமாம் – பிழைகளையும் ஒத்துக்கொண்ட அமைச்சர்

நாட்டில் அடுத்த வாரமளவில் அரிசியின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் கெபினட் சபையில் கலந்துரையாடினோம் . விவசாயிகளின் உரப்பிரச்சனை தொடர்பாக உண்மையில் விவசாயிகளிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களிற்கு இழப்பீடு வழங்க உத்தேசித்துள்ளனர்.

வரும் வாரங்களில் அரிசியின் விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே ஏப்ரல் மாதம் வருகையில் சிறந்த விளைச்சலை பெற முடியும்.

மின்சார துண்டிப்பு அளவுக்கு மீறிய தகவல்களை கூறியதுதான் தவறான விடயம். அரசாங்கத்திலும் சில தவறுகள் ஏற்பட்டன.

அதேபோல 5,6 ஆண்டுகளாக நாங்கள் புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கவில்லை. அமைத்திருந்தால் இன்று பல பிரச்சினைகளை குறைத்திருக்கலாம்.

மின் வியரத்தை குறைத்தால் இன்று இவ்வளவு சிக்கல் ஏற்பட்டு இருக்காது.
முழு பங்களிப்புடன் செயல்பட்டால் பிரச்சனைகளை குறைக்கலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *