
ஆட்சியைக் குழப்பவோ, ஆட்சியாளர்களைக் குழப்பவோ தமக்கு இப்போது எண்ணம் இல்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
தாம் ஆட்சியிலிருந்து வெளியேறுவதன் ஊடாக இன்னொரு குழுவினர் நன்மையடையக் காத்திருக்கின்றனர்.
மக்களுக்கு அறிவுறுத்தல்கள் இன்றி மின்சாரத்தை வெட்டுவதனால் பாரிய இழப்புகள் ஏற்படுகின்றது.
நாட்டில் மின்சாரத் தடை பாரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் இதனால் பாரிய நட்டமும் ஏற்படவுள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்காமல் மின்சாரத் தடை விதிப்பதானது மிகவும் பிழையான காரியம். இதனால் நாடு பாரிய சிக்கலை சந்திக்கும். – என்றார்.
இதன்போது, ஆளும் கட்சியிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகுவது தொடர்பில் ஊடகவியலாளர் தொடுத்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஊடகவியலாளர்களுக்கு தான் தாம் உடனடியாக வெளியேற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.