ஏர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் குழுமத்திடம் இன்று ஒப்படைப்பு!

ஏர் இந்தியா நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) டாடா சன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடன்சுமை காரணமாக நட்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து குறித்த நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இருப்பினும் ஒரு சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *