வீட்டில் தனித்திருந்த வயோதிபப் பெண் சடலமாக மீட்பு!

அம்பாறை – சாய்ந்தமருது 15 ஆம் பிரிவு புதுப்பள்ளி வீதியில் உள்ள வீட்டில் தனித்திருந்த வயோதிபப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

75 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன.

இவ்வாறு மர்மமாக சடலமாக மீட்கப்பட்டவரின் தலைபகுதியில் காயம் ஒன்று காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் பிள்ளைகள் திருமணம் முடித்து பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருவதுடன், வீட்டில் தனித்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *