இந்தியா – மத்திய ஆசிய உச்சிமாநாடு இன்று!

இந்தியா – மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) காணொலி காட்சி மூலம் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது இந்தியாவுடனான வர்த்தகத்தை பெருக்கவும், கல்வி, கலாச்சாரம், மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா பரவல், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *