
இலங்கையில் நாளாந்தம் 2 ஆயிரம் கொரோனா நோயாளிகள் பதிவாகுவதாகவும், உண்மையான தரவுகள் ஊடகங்களில் வெளியாகவில்லை என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது, பதிவாகும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.
நாளாந்தம் 2,000 கொரோனா நோயாளிகள் பதிவாகி வருகின்றனர். உண்மையான தரவுகள் ஊடகங்களில் வெளியாகவில்லை.
மேலும் இதன் காரணமாக வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன.
ஏற்கனவே இருந்த பல சிகிச்சை மையங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நோயாளர்கள் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்தால், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா பல்கலைக்கழகம், கல்வியற்கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு கொரோனா!