கிளிநொச்சியில் “நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை!

நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

குறித்த நடமாடும் சேவையை நீதி அமைச்சர் அலி சபிரி இன்று (வியாழக்கிழமை)காலை 10 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய வளாகத்தில் ஆரம்பித்து வைத்தார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதி அமைச்சரை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

விருந்தினர்களிற்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் இன்னிய வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வரவேற்பு நடனம் இடம்பெற்றதை தொடர்ந்து இழப்பீடுகளிற்கான திணைக்களத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு இழப்பீட்டு தொகைகள் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *