பாணந்துறை துப்பாக்கிப் பிரயோகம்; வெளியான புதிய தகவல்கள்

பாணந்துறையில் வைத்தியசாலை ஒன்றுக்கு முன்னால் அடையாளம் தெரியாத குழுவினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் மக்கள் பார்த்துக்கொண்டிருந்த போது, பணந்துறை கேதுமனி மகளிர் வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது இனந்தெரியாத நபர்களால் இன்று (27) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி செயலிழந்ததால் சாரதி உயிர் தப்பியுள்ளதாக இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

துப்பாக்கியிலிருந்த செயலிழக்காத தோட்டாவொன்று அம்பியூலன்ஸ் வாகனத்துக்கு முன்னாள் உள்ள சாரதி இருக்கைக்கு அருகிலுள்ள கதவின் கீழிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அம்பியூலன்ஸ் வாகனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சாரதிக்கு காயம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.

திடீரென வைத்தியசாலையின் முன்னால் இடம்பெற்ற இந்த சம்பவத்தால், அங்கிருந்த மக்கள் கடும் பதற்றம் அடைந்துள்ளனா்.

அம்பியூலன்ஸ் வாகனத்தின் சாரதி நோய்வாய்ப்பட்ட பெண்ணொருவரை அழைத்துக்கொண்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று காலை 11.45 மணயளவில் வருகை தந்துள்ளாா்.

அந்த சந்தர்ப்பத்தில் இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் நால்வர் வருகை தந்துள்ளனா்.

அம்பியுலன்ஸ் வாகனம் வைத்தியசாலைக்குள் நுழைந்தவுடன், நபரொருவர் அம்பியூலன்ஸ் வாகன சாரதியின் கதவுக்கு அருகில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளாா்.

இன்னுமொரு நபரொருவர் வைத்தியசாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பாதுகப்புக்காக இருந்துள்ளதாக பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.

இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி செயலிழந்ததால் ஒரு தோட்டா செயலிழந்திருக்கவில்லை என இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.

குறித்த அம்பியூலன்ஸ் வாகனத்தின் சாரதி களுத்துறை, உதுரு தொடுபொல வீதியை சேர்ந்தவர் என பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனா்.

கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வலானை குற்றப்புலனாய்வு பிரிவினூடாக ஹொரணை, தின்ஹேனபுர பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, 42 கோடி ரூபா பெறுமதியான 42 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அந்த சம்பவத்தின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாா் சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *