
கொழும்பு, ஜனவரி 27:
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய COVID-19 சுகாதார வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் ஆர்டி- பிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுபவர்கள், சிறப்பு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இலங்கை குடிமக்கள், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தல் வசதி வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தரம்-1 ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கோவிட்-19 தடுப்பூசி அட்டை, புறப்படுவதற்கு முன்னான ஆர்டி-பிசிஆர் எதிர்மறை சோதனை முடிவு ஆகியனஇலங்கை வருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன.