பிரதமர் மகிந்தவுக்கு சத்திர சிகிச்சை: உறுதிப்படுத்திய சமல் ராஜபக்ச

கொழும்பு, ஜனவரி 28:

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதை நீர்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சத்திரசிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருப்பதால் திட்டமிட்டபடி நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என கம்பளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

முன்னதாக, தனது தந்தைக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை விளையாட்டுத்துறை அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ச புதன்கிழமை மறுத்திருந்தார்.

கடந்த திங்கட்கிழமை நவலோகா தனியார் மருத்துவமனையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகுத்தண்டில் சிறிய சத்திரசிகிச்சைக்கு நடந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. லமினெக்டோமி எனப்படும் இந்த முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையை, இங்கிலாந்தில் வசிக்கும் பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ஹிலாலி நூர்தீனால் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *