இலங்கை பாரதூரமான அனர்த்த விளிம்பில் உள்ளது! பாட்டலி சம்பிக்க

இலங்கை பாரதூரமான அனர்த்தம் ஒன்றின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், ராஜபக்சவாதம் கூறும் உபதேசங்களை தொடர்ந்தும் கேட்காது மக்கள் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் எழுச்சிப் பெறும் காலம் வந்துள்ளது. அந்த மக்கள் எழுச்சியானது அமைதியான முறையிலும் அகிம்சை வழியிலும் இருக்க வேண்டும்.

இவ்விதமாக இலங்கை அரசால் தொடர்ந்தும் முன்நோக்கி செல்ல முடியாது.

பொது மக்கள் இந்த பிரச்சினையில் தலையிடுவதை தொடர்ந்தும் தாமதம் செய்தால், அந்த பிரச்சினை மேலும் உக்கிரமடைய காரணமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கானோருக்கு ஒமிக்ரான்; அபாய வலயமாக மாறிய மட்டக்களப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *