கொரோனா எதிரொலி: வவுனியா பாஸ்போர்ட் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது

வவுனியா, ஜனவரி 28: குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடமையாற்றும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வவுனியா பிராந்திய அலுவலகம் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

இது தொடர்பாக வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வு திணைக்கள மூத்த அதிகாரி கூறுகையில் “

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களுக்கு வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடவுச் சீட்டு விநியோகம், கடவுச் சீட்டு விண்ணப்பம் உள்ளிட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *