முதலில் நாம் என்ன கட்டத்தில் இருக்கின்றோமென சிந்திக்க வேண்டும்! சித்தார்த்தன்

கட்சிகள் சொல்வதை நம்புவதற்கு முதல்,நாம் என்ன கட்டத்தில் இருக்கின்றோம் என சிந்திக்க வேண்டுமென புளெட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அகில இலங்கை தமிழ் காங்கிரசில் உள்ளவர்கள் இப்போது மாகாண சபை தேர்தலில் கலந்து கொள்வதற்கு மிக ஆர்வமாக உள்ளனர்.

பாராளுமன்றம் செல்ல முடியாதவர்கள் இதற்கு பெரும் முனைப்புடன் செயல் படுகின்றனர்.

கட்சிகள் சொல்வதை நம்புவதற்கு முதல்,நாம் என்ன கட்டத்தில் இருக்கின்றோம்.

இதற்கு என்ன வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள்.

இலங்கை அரசிடம் சொல்லுங்கள் ,இருப்பதை முதலில் அமுல் படுத்துங்கள் இந்தியாவிடம் கேட்க்கின்றோம் என்று. வேறொன்றுமில்லை என்றார்.

தமிழ் மக்களையும் புலம் பெயர்ந்தோரையும் ஏமாற்ற முடியாது! ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *