கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா: பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்!

கொழும்பின் பிரதான 10 பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் அந்த வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாடு முழுவதும் பல பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *