ஹட்டனில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – டிக்கோயா தரவளை பகுதியில் இன்று காலை, ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்
குறித்த பேருந்தில் 17 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்ததுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.