
மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்றால், முதலில் அமைச்சர் அலுவலகங்களில் உள்ள ஏசியை நிறுத்துங்கள் என சிங்கள ராவய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைப்பின் தயாராதன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வீதி விளக்குகளை அனைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவையாவும் அமைத்தது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு.
அப்படி என்றால் முதலில் அமைச்சர் அலுவலகங்களில் உள்ள ஏசிகளின் பாவனையை நிறுத்துங்கள்.
இங்கு யாரும் அதிக குளிர் உள்ள பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் அல்ல.
மற்றும் நாட்டில் மின் உற்பத்திக்கு எண்ணெய் இல்லை. கொள்வனவு செய்ய இங்கு டொலர் இல்லை.
அனைத்து துறைகளிலும் உள்ள தலைவர்கள் பதவியில் இருந்து நீங்குகின்றனர்.
இதிலிருந்து விளங்குவது அங்கு பிழைகள் ஏற்பட்டுள்ளன. அப்போது டொலர் பற்றாக்குறை ஏற்பட்டதான் செய்யும்.
மற்றும் டொலர்கள் இல்லை என்றால் நம் நாட்டில் உள்ள அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு டொலர் செலவு செய்கின்றனர். அப்போது டொலர் பற்றாக்குறை ஏற்பட்டாதா? அவர்கள் அங்கு செலவு செய்வது டொலர்கள் இல்லையா?.
இவர்களுக்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.- என்றார்.
தமிழ் மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுளே தற்போது நடைபெறுகின்றது! – கலையரசன் குற்றச்சாட்டு