மூதூரில் மலையில் வெடி வைத்து கல் உடைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பு!

திருகோணமலை, மூதூர் – சந்தனவெட்டை பகுதியில் உள்ள கல் மலையில் வெடி வைத்து தனியார் ஒருவர் கல் உடைக்க முட்பட்ட வேளை, சந்தனவெட்டை கிராம மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதையடுத்து கல் உடைக்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது.

இச்சம்பசம் இன்று வெளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சந்தனவெட்டை கல்மலையை சுற்றி குடியிருப்புக்கள் இருப்பதால் கல்மலையை வெடி வைத்து உடைக்கும்போது வெடிக்கின்ற கட்கள் வீடுகளில் விழுந்து சேதம் விளைவிப்பதாகவும், வீதியால் செல்கின்ற பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டி வரும்.

அத்தோடு வெடிப்புச் சத்தத்தினால் கிராமத்தில் இருக்கும் வயதானவர்கள் அச்சம் கொள்கின்றனர் என தெரிவித்து கல் உடைப்பதற்கு மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

தமது கிராம வளத்தை ஏனையவர்கள் அனுபவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

எனினும் தாம் முறையான அனுமதியைப்பெற்றே கல் உடைக்கவுள்ளதாக கல் உடைக்க வந்தவர்கள் தெரிவித்தபோதும் கிராம மக்களின் எதிர்ப்பினால் கல் உடைக்க வந்தவர்கள் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *