
இலங்கை வங்கியின் புத்தளம் கிளையின் பணிபுரியும் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சுமார் 14 நாட்களுக்கு தற்காலிகமாக குறித்த வங்கியின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஏ.ரீ.எம். மில் பணத்தை மக்கள் பெருவதற்காக வைப்பிலிடப்பட்ட பணத்தை திரும்பவும் மீளப்பெற்றுள்ளதாகவும் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் வங்கியின் முகாமையாளர் தெரிவித்தார்.
பணம் பெருவதாக இருந்தால் பாலாவி அல்லது மதுரங்குளி வங்கியினை நாடுமாறு இலங்கை வங்கியின் புத்தளம் கிளையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.