திருப்பதி ஏழுமலையானை தரிசிப்போருக்கு அமுலாகும் புதிய நடைமுறை!SamugamMedia

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கான வருகை தரும் பக்தர்கள் மலையில் தங்கும்  அறைகள் ஒதுக்கீடு செய்வதில் வெப்காம் பரிசோதனையுடன் கூடிய அதிநவீன முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு வரும் பக்தர்களிற்கு அறைகளினை ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் முறைகேடுகளினை தடுக்கவே  நவீன தொழில்நுட்பத்தினை தேவஸ்தான நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.

அதனடிப்படையில் தங்கும் அறைக்கான ரசீதினை வாங்குவோரின் முகம் வெப்காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, வேலை முடிந்து அவர்கள் அறைகளினை காலி செய்கின்ற பொழுது வெப்காமிராவில் பதிவான அதே நபர் இருந்தால் மாத்திரமே முன்பணம் திரும்ப வழங்கப்படும்.

வேறொரு நபர் அறையினை காலி செய்வதாக கூறும் பட்சத்தில் முன்பணம் திரும்ப செலுத்தப்பட மாட்டாதாம்.

இதனால் தரகர்களினை நம்பி பணம் செலவழிப்பது தவிர்க்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது திருப்பதி கோயில் நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *