தங்களது கோரிக்கைகளை அமெரிக்கா உதாசீனப்படுத்தி விட்டது: பிரான்ஸிடம் ரஷ்யா தெரிவிப்பு!

உக்ரைன் விடயம் தொடர்பாக ரஷ்யா விடுத்த கோரிக்கை மற்றும் கவலைகளை அமெரிக்காவும் நேட்டோவும் கவனிக்கவில்லை என்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்; மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல் வெளிவரும் இந்தச்சூழலில் இருநாட்டு தலைவர்களும் நேற்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் முன்பாக அமெரிக்காவின் திட்டத்தை மிக நெருக்கமாக கவனிப்பதாகவும் புடின் கூறியுள்ளார்.

இதனிடையே அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *