
திருகோணமலை – உவர்மலை சந்தியில் உள்ள வடிகாண் ஒன்றில் சுமார் 6 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயமறிந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பிரதேச இளைஞர்கள் , வன விலங்கு திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு நீண்ட பிராயித்தத்திற்கு மத்தியில் அறிவித்து, அவர்கள் வரும் வரை, சுமார் 1.30 மணி நேரம், பாம்பின் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும், அதே சந்தர்ப்பத்தில் மனிதர்கள் பாம்பினை துன்புறுத்தாத வண்ணமும் பாதுகாத்து வன விலங்கு திணைக்களத்தினரிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
