
திருகோணமலை மெதடிஸ்த தேவாலயத்தின் 200 வது ஆண்டு நிறைவு விழா பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெறுள்ளது.
திருகோணமலை டொக்யார்ட் மெதடிஸ்த தேவாலயத்தின் 200 வது ஆண்டு நிறைவு விழா பற்றியும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வரலாறு பற்றியும் இது சம்பந்தமாக திருகோணமலை ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை (28) மாலை 5.00 மணிக்கு திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியின் மண்டபத்தில் இடம் பெற்றது.
டாக்டர் ஞான குனாலன் தலைமையில் இடம் பெற்ற இச் சந்திப்பில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்பனி எபினேசர் ஜோசப் உட்பட திருச்சபையின் முக்கியஸ்தர்களும் கலந்து கருத்துக்களை வெளியிட்டனர்.


