இலங்கையிலுள்ள சிறுவயது பிள்ளைகளுக்கு ஆபத்து- விசேட மருத்துவர் விடுத்த எச்சரிக்கை!SamugamMedia

சிறுவயது பிள்ளைகள் இணையத்தில் கல்வி கற்கும் போது ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் அவர்களின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கண் மற்றும் காது தொடர்பில் விசேட நிபுணர் டாக்டர் சந்திரா ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் அடிக்கடி இயர்போன் பயன்படுத்துவதால், காதுக்குள் காது மெழுகு தள்ளப்படுவதாகவும், இதனால் காது அழுகல், பூஞ்சை, காது டிரம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவதாகவும்  சந்திரா ஜயசூரிய தெரிவித்தார்.

இதுபோன்று காதில் பாதிப்பு ஏற்படுவதால், காது கேளாமை ஏற்படும் என்றும், எனவே கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது செவித்திறன் குறைபாடு ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுமாறு அவர் வலியுறுத்தினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *