மூதூரில் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டு ஒருவருட பூர்த்தியின் நிகழ்வுகள்

கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டு ஒரு வருட பூர்த்தியின் நிகழ்வுகள் மூதூர் சுகாதார பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 10.06 மணிக்கு சுப வேளையில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து கொவிட் தொற்றினால் உயிர் நீத்தவர்களுக்கான மௌன பிரார்த்தனையும் ,முன்கள பணியாளர்களுக்கு ஆசி வேண்டி பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், மூதூர் சிரேஷ்ட பொதுசே சுகாதார பரிசோதகர், மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியின் அதிபர், மூதூர் பொலிஸார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *