கிளிநொச்சியில் ஏராளமான மதுபான போத்தல்களுடன் சிக்கிய நபர்

கிளிநொச்சி தருமபுரம் – குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான வகையில் மதுபான போத்தல்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதாக சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எம். சதுரங்கவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை (30) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *