கட்டடத்தில் இருந்து விழுந்து சிறுவன் மரணம்

கொழும்பு, ஜனவரி 29: பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாம் மாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக பம்பலப்பிட்டி போலீஸார் தெரிவிக்கையில் “பம்பலப்பிட்டி கிரெஸ்டர் பிளேஸில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாம் மாடியில் இருந்து சிறுவனொருவர் தவறி விழுந்துள்ளார்.

அவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக, பம்பலப்பிட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *