
வடமாகாண ஆளுநரின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த இளமதி சபாலிங்கம் நேற்றுமன்தினம் ஆளுநரின் கொழும்பு அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
மும்மொழிப் புலமை வாய்ந்த இளமதி சபாலிங்கம் அரச நிர்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சு, தபால் சேவைகள் அமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்களில் மேலதிக செயலாளராகவும், கடமையாற்றியவர்.
மேற்படி ஆளுநரின் செயலாளர் கொழும்பிலும் யாழிலுமாக கடமையாற்றுவார்.
இதேவேளை, வடமாகாண ஆளுநரின் யாழ். அலுவலகத்திற்கு உதவிச்செயலாளர் ஒருவரும், வடக்கு மாகாண பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.