நீர்வீழ்ச்சியில் மாயமான ஐவரில் நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு!

<!–

நீர்வீழ்ச்சியில் மாயமான ஐவரில் நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு! – Athavan News

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயிருந்த நிலையில் நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

11 பேர் நீராட சென்றிருந்ததுடன், அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே அவர்களுள் நால்வர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் காணாமல் போன நபரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *