
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இந்திய பிரதமரிடம் அனுப்பிய கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாபெரும் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.
நல்லூல் தியாக தீபம் திலீபன் நினைவு தூபியிலிருந்து ஆரம்பமாகி நல்லூர் சங்கிலியன் பூங்காவரை இடம்பெறவுள்ள போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை பிரதிநிதித்துவபடுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு பேருந்துகளில் ஏற்றிவரப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.


