இந்தியாவில் புதிதாக 2 இலட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 இலட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸினால் மேலும் 893 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களி;ன் எண்ணிக்கை 4 இலட்சத்து 94 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.

இதேநேரம், 3 கோடியே 87 இலட்சத்து 13 ஆயிரத்து 494 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 18 இலட்சத்து 84 ஆயிரத்து 937 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *