சுற்றுச் சூழலுக்கு கழிவாக மாறும் முகக்கவசம்!

நாட்டில் ஒவ்வொரு நொடிக்கும் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட 50 ஆயிரம் முகக் கவசங்கள் சுற்று சூழலுக்கு கழிவாக சேர்க்கப்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுபுன் லஹிரு பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சர்வதேச நாடுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஒவ்வொரு நொடிக்கும் 30 இலட்சம் முகக் கவசங்கள் சூழலுக்கு கழிவாக சேர்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பாவனை வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த நிலையில், பெருமளவான முகக்கவசங்கள் முறையற்ற விதத்தில் சுழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அகற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வருடமொன்றிற்கு 1.56 பில்லியன் முகக் கவசங்கள் கழிவுகளாக கடலில் சேர்க்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து சர்வதேச அளவில் சூழலுக்கு விடப்படும் மருத்துவ கழிவுகளின் அளவு 87 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

சூழலுக்கு விடுவிக்கப்படும் முகக் கவசங்கள் ஊடாக விலங்குகளுக்கு பாரிய அளவில் சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலையில் ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *