
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு, காலடியில் அரச சேவையை வழங்குவதற்கு நீதி அமைச்சு தயாராக உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் 5 நாட்கள் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்றது. 2,850 பேர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களில் அரைவாசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1,525 பேருக்கான முடிவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
41 பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண முடியாது. அவை எமது அமைச்சுக்கள் வரவில்லை.
வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடமாடும் சேவையை நாம் முன்னெடுத்துள்ளோம்.
அடுத்து கிழக்கு மாகாணத்திலும் அதன் பின்னர் தெற்கு மாகாணத்திலும் இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளோம். சுமார் 500 அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மக்கள் பிரச்சினைகளை அவர்கள் அறிய கூடியதாக இருக்கும். போரால் பாதிக்கப்பட்ட மாகாண என்ற அடிப்படையில் மக்களின் காலடிக்கு சேவைகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.- என்றார்.