
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில், சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக, பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பரீட்சையில் சித்தியடையும் அனைவருக்கும் பசுமை அமைதி விருதுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்புச் சித்தி அடைந்தவர்களும் சான்றிதழோடு பெறுமதி வாய்ந்த பரிசுப் பொதியும், முதல் மூன்று இடங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தினாலான பசுமை அமைதி விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மாணவர்களுக்கு சூழலியில் ஆசான் க.சி குகநாதனின் ஞாபகார்த்த பசுமை அமைதி விருதுகளும், சிறந்த சூழல் நேய செயற்பாட்டாளருக்கு தால காவலர் மு.க.கனகராசா ஞாபகார்த்த பசுமை அமைதி விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன் கலந்து சிறப்பித்துள்ளார்.

