மறுகாவின்…

மறுகாவின் ஏற்பாட்டில் தில்லையின் ‘விடாய்’ கவிதைநூல் வெளியிடப்பட்டது.

“மறுகா” இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் கவிஞர் தில்லையின் ‘விடாய்’ கவிதைநூல் வெளியீடு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்
றது.

கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.ரூபி வலன்ரினா பிரான்சிஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், டாக்டர்.புஷ்பலதா லோகநாதன் ,எழுத்தாளர் இந்திராணி புஸ்பராசா, சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டதுடன்,கவிஞர்கள் வாசுதேவன், த.உருத்திரா ஆகியோர் விமர்சன உரையாற்றினர்.
அத்துடன் எழுத்தாளர் உமாவரதராஜன் உட்பட பல இலக்கியவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *