அநுர குமார திஸாநாயக்க மீது முட்டை தாக்குதலா?

கம்பஹா பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலை அடுத்து, அவ்விடத்தில் அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து பொலிஸாரின் தலையீட்டில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் இருவரை, அங்கிருந்த சிலர் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *