
கம்பஹா பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த மாநாட்டிற்கு முட்டை தாக்குதல் நடத்த வந்த இருவர், அங்கிருந்தவர்களால் கைது செய்யப்பட்டு நிட்டம்புவ காவல்துயைினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முட்டை தாக்குதலின் அனைத்து விபரங்களையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலம் வாய்ந்த அமைச்சர் மற்றும் பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் பெயர்களை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் தங்களுக்கு ரூ.1000 சம்பளம் வழங்கியதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், முட்டை தாக்குதலை நடத்துவதற்கான சதித்திட்டம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிட்டம்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.