
கொழும்பு, ஜனவரி 31: எதிர்வரும் வாரங்களில், பூஸ்டர் டோஸ் வழங்க நடமாடும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என்று ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தியத்தலாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: எதிர்வரும் வாரங்களில் விசேட தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்படும். அதன்படி, பூஸ்டர் டோஸ் வழங்க நடமாடும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும். கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே இதுவரை பூஸ்டர் டோஸ் பெறாதவர்கள் விரைவில் அதனை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசி போடும் வகையில் விசேட தடுப்பூசி மையங்களைத் தொடங்க நாட்டின் முப்படை வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடமாடும் மையங்கள் மூலம் தடுப்பூசியை வழங்க எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.