கூட்டமைப்பைச் சந்திக்க ஆர்வம் காட்டும் கோட்டா! – பீரிஸ்

கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தில் ஜனாதிபதி இன்னும் அக்கறையுடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எம்.ஏ.சுமந்திரனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ள சுமந்திரன், இந்த திருத்தங்கள் புதியனவல்ல என்றும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தை ஒத்திவைப்பது குறித்தும் சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனிய மண் அகழ்வு உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *