ஒருவருடத்தில் எல்லாம் மாற்றும்! – அமைச்சர் தினேஸ் நம்பிக்கை

எதிர்வரும் 12 மாதங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் செயற்படுவார்கள் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி நாட்டில் உள்ள 14,500 கிராம சேவையாளர் பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு அபிவிருத்தித் திட்டம் அல்லது தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பல கிராமங்களை உள்ளடக்கியிருப்பதால் புதிய அபிவிருத்தித் திட்டங்களின் எண்ணிக்கையை மும்மடங்காக 14,500 ஆக உயர்த்த முடியும்.

நிதியமைச்சரால் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வரவு செலவுத்திட்டம் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட வரவு செலவுத்திட்டமாகும்.

தற்போதைய கொரோனா நெருக்கடி இரண்டாம் உலகப் போரை விட மோசமானது. இரண்டாம் உலகப் போரின் போது, அரிசி பற்றாக்குறையால் பஜிரி சாப்பிட வேண்டியிருந்தது.

1970களில் திருமதி பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட உணவு உற்பத்தித் திட்டம் தொடருமானால், எமது நாடு உணவு உபரி நாடாக மாறும்.

ஆனால், 1977க்குப் பிறகு நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் கைவிடப்பட்டு அவை முடங்கின. தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையை அர்த்தப்படுத்த தயாராக உள்ளது. கொரோனா நெருக்கடியை அரசு சமாளித்து வருகிறது.

தற்போது எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இலங்கை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இல்லாததால் எண்ணெய்க்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும். ஜனாதிபதி அந்தக் கருத்தை முன்வைத்துள்ளதுடன், பயிர்ச்செய்கை யுத்தத்திற்கான திட்டத்தையும் முன்வைத்துள்ளார். – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *