மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அரசு! விஜித குற்றச்சாட்டு

இன்று நம் நாட்டில் மக்களின் எந்த ஒரு அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இவ் அரசாங்கம் உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கம்பஹாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு பால்மா இல்லை, அரிசியின் விலை அதிகம், எரிவாயு இல்லை, நெற் பயிர்கள் விற்பனை செய்ய முடியவில்லை. விவசாயிகளிற்கு உரம் இல்லை இவை அனைத்தும் தீர்வு இல்லை.

இரண்டு ஆண்டுகளாக தோல்வியுற்ற நிலையில் கோட்டாபயவின் ஆட்சி உள்ளது. எந்த பிரச்சினைக்கும் தீர்வுகளை காண முடியாத நிலையில் உள்ளது.

நாடு முழுவதும் இவ் அரசாங்கம் மக்களிடையே வெறுப்பை சம்பாதித்துள்ளது.

கம்பஹாவில் நடந்த கூட்டத்தில் அவ் வழியில் வந்த சிலர் முட்டைகளை அடித்தனர் அவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் முட்டை அடிக்கப்பட்டது.

அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதில் ஒருவர் தமது பெயரை மாற்றி உள்ளார். தெளிவாக தெரிகிறது இவர் பல தவறுகளை செய்ய பெயரை மாற்றியுள்ளார்.

கெப்ரியல் ரத்மல் ஹஸித குமார அவர் தனது பெயரை மஹா கெதர ஹஸித குமார விஜயரத்ன என தனது பெயரை மாற்றியுள்ளார்.

இவ்வாறானவர்களை அனுப்பி எங்களுடன் மோத வேண்டாம் என கோட்டாபயவுக்கு நான் கூறுகிறேன்.

மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வுகளை வழங்க முடியாமல் எங்களுடன் இவ்வாறு மோத வேண்டாம் எனவே இவ்வாறான தவறான செயல்கள் செய்ய வேண்டாம்.- எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *