
காலி – பூஸா ரில்லம்ப ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று முற்பகல் 10.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா நோக்கி பயணித்த ரயிலில், குறித்த முச்சக்கரவண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மருமகள் ஆகியோரே இந்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்..
விபத்தில் காயமடைந்தவர்கள் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நால்வரில் மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.