
திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்திற்குள் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்த அட்டகாசம் புரிந்துள்ளதாக தோப்பூர் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன்போது இரண்டு வீடுகளின் சுற்றுமதில்களை சேதப்படுத்தியுள்ளது.
அத்தோடு வீட்டில் காணப்பட்ட மரவெள்ளி,சோளம் உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
மேலும் கடையொன்றின் கதவை உடைத்து களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லினை யானைகள் சாப்பிட்டுச் சென்றுள்ளது.
தொடர்ச்சியாக தமது பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும் காட்டு யானைகள் ஊருக்குள் உட்புகாத வகையில் யானை பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறும், பாதிக்கப்பட்ட தமக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தோப்பூர் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


