
கொழும்பு, பெப் 1: தேசிய மக்கள் சக்தி (ஜேஜேபி) ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளும் ரத்துச் செய்யப்படும் என்று ஜேஜேபியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘உடைந்த தாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான தீர்வு’ என்ற தலைப்பில் கம்பஹா மாவட்டத்தில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியது “மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு மேலாக இருக்கக்கூடாது. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளும் ஜேஜேபி ஆட்சிக்கு வரும்போது ரத்துச் செய்யப்படும்.
தற்போதைய அரசு நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறது. இந்த அழிவுகரமான பாதையில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்பது நாட்டு மக்களின் புலம்பலாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.