
நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோருக்கு குறைந்த விலையில் தேங்காய்களை வழங்குவதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும், தென்னை ஆராய்ச்சி நிறுவனமும் வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டன.
அந்த ஒப்பந்தத்துக்கு இணங்க லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக நுகர்வோர் இந்த வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிலையான விலையில் தேங்காய்களை பெற்றுக்கொள்ள முடியும்.